Friday, January 16, 2015

ABOUT BODHIDHARMA 2


X-Received: (qmail 82584 invoked from network); 19 Jul 2008 00:30:32 -0000
X-Received: from unknown (66.218.67.95) by m47.grp.scd.yahoo.com with QMQP; 19
 Jul 2008 00:30:32 -0000
X-Received: from unknown (HELO n42c.bullet.mail.sp1.yahoo.com) (66.163.168.176)
 by mta16.grp.scd.yahoo.com with SMTP; 19 Jul 2008 00:30:32 -0000
X-Received: from [216.252.122.216] by n42.bullet.mail.sp1.yahoo.com with NNFMP;
 19 Jul 2008 00:30:32 -0000
X-Received: from [66.218.69.6] by t1.bullet.sp1.yahoo.com with NNFMP; 19 Jul
 2008 00:30:32 -0000
X-Received: from [66.218.66.92] by t6.bullet.scd.yahoo.com with NNFMP; 19 Jul
 2008 00:30:32 -0000
Date: Sat, 19 Jul 2008 00:30:32 +0000
From: jaybee555 <jaybee555@yahoo.com>
Subject: [agathiyar] Tea Mystery? (tscii)
X-Originating-IP: 66.163.168.176
Sender: agathiyar@yahoogroups.com
X-Sender: jaybee555@yahoo.com
To: agathiyar@yahoogroups.com
Reply-to: agathiyar@yahoogroups.com
X-Mailer: Yahoo Groups Message Poster
Delivered-to: mailing list agathiyar@yahoogroups.com
Comment: DomainKeys? See http://antispam.yahoo.com/domainkeys
DomainKey-Signature: a=rsa-sha1; q=dns; c=nofws; s=lima; d=yahoogroups.com;
b=PyTC5J8A+pgguMXfmKx1UQtuV+8LwmfSGKxp6C1k1jyLi0PkS9vnSZiTdWPq5otoqQjPuiWOH58tRFyOkeFEJwsV42LYpRsMYn3FYUHT22xqa7IvJREjHJdFNO0/BvrF;
X-Yahoo-Newman-Id: 1024082-m45308
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
X-eGroups-Msg-Info: 1:6:0:0:0
X-Yahoo-Post-IP: 218.111.69.97
X-Yahoo-Profile: jaybee555
X-eGroups-Approved-By: jaybee555 <jaybee555@yahoo.com> via web; 19 Jul 2008
 00:31:36 -0000
X-Yahoo-Newman-Property: groups-email-tradt-m
X-Scanner-mx2:
Mailing-List: list agathiyar@yahoogroups.com; contact
 agathiyar-owner@yahoogroups.com
List-Unsubscribe: <mailto:agathiyar-unsubscribe@yahoogroups.com>
List-Id: <agathiyar.yahoogroups.com>
User-Agent: eGroups-EW/0.82
Original-recipient: rfc822;jaybee@tm.net.my


அன்பர்களே,

பழங்காலத்தில் சீனாவிலிருந்து பலவகையான
சரக்குகளைத் தமிழர்கள் வாங்கினார்கள். அவற்றில்
சிலவறைப் பற்றி தெரிகின்றது. பெயர்களிலிருந்துகூட
அறியலாம். சீனாக்காரம், சீனாக்கற்கண்டு, சீனிவெடி,
சீனிச் சர்க்கரை என்று சில பெயர்கள் இன்றும்
வழங்கப்படு வருகின்றன.
சீனாவின் மிக முக்கியப் பொருள்களில் ஒன்று
டீ எனப்படும் தேயிலை.
Teh என்பதுதான் அந்த மூலிகையின் பெயர்.
அதை ஆங்கிலத்தில் எழுதும்போது Tea என்று எழுதினார்கள்.
Bear என்ற சொல்லில் வரும் 'ea'-யில் உச்சரிப்பை வைத்து
அப்படி எழுதினார்கள். ஆனால் பிற்காலத்தில் Sea -யில்
வருவதுபோன்று உச்சரிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அதிலிருந்து அது டீ-யாக உச்சரிக்கப்பட்டுவிட்டது.
ஈராயிரம் ஆண்டுகளாகச் சீனாவில் டீ புழக்கத்தில்
இருப்பதாகச்சொல்வார்கள். ஒரு பௌத்த பிக்குவின்
கண் இரப்பைகள்தான் தேயிலையாக மாறியதாக
ஒரு மரபுக்கதை இருக்கிறது.
தமிழ்நாட்டிலிருந்து சீனாவுக்குச் சென்ற போதிதர்மர்தான்
அந்த பௌத்தபிக்கு என்றும் சிலர் சொல்வார்கள்.
சோம்பலை நீக்கி, புத்துணர்ச்சியையும் குளிர்ச்சியையும்
ஏற்படுத்தும் பானமாகவும், சிறுநீரைப் பெருகச் செய்து, உடலின்
கழிவுப் பொருள்களை விரைவாக அகற்ற உதவும் முலிகையாகவும்
சீனர்கள் அதைப் பயன்படுத்தினார்கள்.
அப்படிப்பட்ட அரிய பானம்-மூலிகை தமிழ்நாட்டுக்கு
ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கவேண்டும்.
செய்யப்பட்டதா?
தெரியவில்லை.
செய்யப்படவில்லையென்றால்,
ஏனில்லை?
ஏதாவது Embargo போன்ற ஏற்றுமதித் தடைகளைச்
சீனர்கள் விதித்திருந்தனரா? பேப்பர், அச்சிடுதல், கருமருந்து
ஆகியவற்றை அவர்கள் கண்டுபிடித்திருந்தனர். ஆனால் அவை
சீனாவை விட்டு வெளியேறாமல் இருப்பதற்காகத் தடை
விதித்திருந்தனர்.
நாம் அறிந்தவரையில் தேயிலையை ஆங்கிலேயர்கள்
தமிழ்நாட்டுக்குக் கொண்டுவந்தார்கள். அவர்களே தேயிலை
எஸ்ட்டேட்டுகளை ஏற்படுத்தினார்கள்.
அதற்கும் முன்பே தேயிலை தமிழ்நாட்டுக்குக் கொண்டு
வரப்பட்டதா?
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சீனாவின் க்வாங்டுங்
நகரம், காண்ட்டன் நகரம் ஆகிய இடங்களிலெல்லாம் தமிழர்கள்
வசித்துவந்தனர். கோயில்கள் கட்டிக் கொண்டு வாழ்ந்திருந்தனர்.
அவர்களுக்கு நிச்சயம் தேயிலையைப் பற்றி தெரிந்திருக்கும்.
ஒருவேளை வேறொரு பெயரில் தேயிலை தமிழ்நாட்டுக்கு
வந்ததா?

அன்புடன்

ஜெயபாரதி

=========================

சரி.....இப்போது அடுத்த கதை......

இதைத்தான் பௌத்தர்கள் mind-fullness என்று சொல்வார்கள்.
இதற்கு ஏதாவது சொல்லை அந்தக் காலத்தில் தமிழில் பௌத்தர்கள்
வைத்திருந்திருப்பார்கள். ஒரு காலத்தில் பௌத்தர்கள் ஏராளமானோர்
தமிழர்களிடையே இருந்திருக்கின்றன. அவர்களின் சில நூல்களும்
புத்தர் சிலைகளும் மற்ற தெய்வச்சிலைகளும் இன்றும் இருக்கின்றன.
எத்தனையோ தெய்வங்களை இந்து சமயத்துக்கு நம்ம ஆட்கள் மாற்றி
விட்டிருக்கிறார்கள். எத்தனையோ நூல்களை அழித்திருக்கிறார்கள்.

Mindfullness என்பதற்கும் நிச்சயம் சொல் இருந்திருக்கும்.
புத்தமித்திரர், போதிதர்மர், வஜ்ரபோதி, சீத்தலைச்சாத்தனர் போன்றவர்கள்
தமிழர்கள். அவர்களில் முதல்மூவரும் உலகப்புகழ் பெற்றவர்கள்.
சீனா, ஜப்பான், கொரியா, தென் கிழக்காசியா ஆகிய இடங்களில்
புத்த மதம் பரவ காரணமாக இருந்தவர்கள்.

பௌத்த தர்மத்தைச்சேர்ந்த சொற்றொடர்கள் முதலியவை
ஏராளமாக இருந்திருக்கவேண்டும்.
ஆனால் இப்போது அவற்றைக் காணமுடிவதில்லை.

Expurgation என்றொரு சொல் உண்டு.
சுவடுகூட இல்லாமல் அறவே நீக்குவது.

இந்தக் காரியத்தை நம்ம ஆட்கள் - சைவர், ஸ்மார்த்தர், வைணவர்...
எல்லாருமே மிகத்திறமையாகச் செய்து முடித்திருக்கிறார்கள்.
ஆகையால்தான் பௌத்தர்களின் மூல நூலாகக் கருதப்படும்
தம்மபாதாவின் தமிழ்வடிவமோ, அல்லது அதன் வழிநூல்களோ இன்றுவரைக்கும்
கிடைக்கவில்லை. நான் குறிப்பிடுவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும்
முன்னால் சீத்தலைச்சாத்தனார் அவர் படித்த பள்ளியில் அவர் கற்ற
தமிழ் தம்மபாதாவை.
அந்தச் சமயமும் அடியோடு இல்லாமற்போனதோடு அதன்
நூல்களையும் சமயசம்பந்தப்பட்ட சொற்களையும்கூட ஒழித்துக்கட்டி
யிருக்கிறோம். இப்போது நம்மிடம் இருக்கும் மணிமேகலை, நீலகேசி,
சில இலக்கண நூல்கள் முதலியவற்றைத் தவிர அடிப்படையான
ஆதாரநூல்கள் முக்கியநூல்கள் இல்லையல்லவா.
இதைப் பற்றி இன்னும் நிறைய எழுதவேண்டும்.
தக்கயாகப் பரணியைத் தொட்டு ஆரம்பித்து எழுதவேண்டும்.
அடுத்த கதையைச்சொல்கிறேன்....

அன்புடன்

ஜெயபாரதி

aABOUT BODHIDHARMA !

Date: Fri, 21 Oct 2005 23:01:06 +0000
From: JayBee <jaybee@tm.net.my>
Subject: BodhiDharma antique statue
X-Sender: jaybee@pop.tm.net.my (Unverified)
To: Arun Krishnan <drarunkrishnan@gmail.com>,
 "Ananthanarayanan, Vettai" <ananth@mcmaster.ca>,
 "poo@giasmd01.vsnl.net.in" <poo@giasmd01.vsnl.net.in>,
 "S. Anandanatarajan" <s.anandanatarajan@gmail.com>,
 Siva Chinnasamy <schinnas@yahoo.com>,
 Sivapathasekaran <sps10142004@yahoo.co.in>,
 Srikanth K <k_sreekanth_in@yahoo.com>, Suganya <suganya_ml@yahoo.com>,
 Swetha Sampath <sswetha_2000@yahoo.com>,
 Vidya Ramakrishnan <ssankaran384@yahoo.com>
Cc: JayBee <jaybee@tm.net.my>
X-Mailer: QUALCOMM Windows Eudora Pro Version 3.0.3 (32)
X-Virus-Scanned: by Barracuda Spam Firewall Outbound at tm.net.my
X-Virus-Scanned: by Spam Firewall 5 For Inbound at tm.net.my
Original-recipient: rfc822;jaybee@tm.net.my


Dear Friends,

There is large life-size wooden statue of Bodhi Dharma
in an antique shop in Kuala Lumpur.
See it in the picture.
Unlike the other Chinese statues, his eyes, nose, etc are
large and his beard is curled. That is the Ancient Chinese depiction
of a Tamil.

Regards

JayBee

)
Date: Wed, 07 Aug 2002 18:08:12 +0800
Subject: Some more Bodhi Dharma - Re: Bodhi Dharma and others #2 - Re:
  [agathiyar] Re: KELvigaL - #1
To: agathiyar@yahoogroups.com
Message-id: <3.0.3.32.20020807180812.00775960@pop.tm.net.my>
From: JayBee <jaybee@tm.net.my>


At 04:34 PM 8/6/02 +0800, JayBee wrote:
>
> போதி தர்மரைப் பற்றி வேறு சில வரலாறுகளும் இருக்கின்றன.


ஷாஓலின் மரபில் போதிதர்மரைப்பற்றி சில விபரங்கள் வித்தியாசப்
படுகின்றன.

அவர் குங்க் ·புவைக் கண்டுபிடித்தவர் என்று பெரும்பாலும்
ஒப்புக்கொள்வார்கள். குங்க் ·பூ சீனாவில் 3000 ஆண்டுகளுக்கு
முன்பே இருந்ததாகவும், போதிதர்மர் அதில் சில புதிய உத்திகளைச்
சேர்த்தார் என்றும் சொல்வார்கள்.
போர் உத்திகள் அவருக்குத் தெரிந்திருந்ததற்கும் காரணம்
சொல்கிறார்கள். அவர் அரசவம்சம் ஒன்றைச்சேர்ந்தவர் என்றும்,
இளைஞராக இருந்தபோது அரண்மனையைவிட்டு வெளியேறி பௌத்த
சமயத்தில் சேர்ந்ததாகவும், அன்றைய பௌத்தத்தில் இருந்த
உட்பிரிவு ஒன்றைச் சார்ந்திருந்ததாகவும், அந்த உட்பிரிவின்
கோட்பாடுகளுக்கு இந்தியாவில் மதிப்பு இல்லாதிருந்ததால்,
நலாந்தாவிலிருந்து இமயமலையை கால்நடையாகவே தாண்டித்
திபேத்துக்குச் சென்று, அங்கிருந்து மலைகளைக் கடந்து சீனாவுக்குச்
சென்றுவிட்டதாகவும் சொல்வார்கள். அவர் வருகிறார் என்ற செய்தியை
அறிந்த மன்னன் எதிர்கொண்டழைக்க வந்ததாகவும், அப்போது
அவர் காலில் ஒரு பாதுகையும் கையில் ஒரு பாதுகையுமாகக்
காட்சியளித்ததாகவும் கூறுவார்கள். அதன் காரணத்தைக் கேட்ட
மன்னனைத் திரும்பிச் செல்லுமாறு அனுப்பியதாகவும் சொல்வார்கள்.
ஒன்பதாண்டுகள் அவர் ஒரு குகையில் தியானம் செய்தாராம்.
அப்போது குகையின் சுவற்றை நோக்கியவண்ணம் அமர்ந்திருந்தாராம்.
அவ்வாறு சுவற்றில் அழுந்தியவாறு அமர்ந்திருந்ததால் அவருடைய
உருவம் அந்தக் குகையின் சுவற்றில் பதிந்துவிட்டதாம்.
அவ்வாறு அவர் தியானம் செய்யும்போதுதான் குங்க் ·பூ
போரில் உள்ள புலி, நாரை, சிறுத்தை, பாம்பு, யாளி ஆகிய
உத்திகளைக் கண்டறிந்தார் என்று சொல்வார்கள்.

அன்புடன்

ஜெயபாரதி
>
>
> போதிதர்மர் சீனாவில் இருந்த காலத்தில் புத்தபிக்குகள் பிச்சை
>எடுத்துக்கொண்டு பலவீனமானவர்களாகவும் சமுதாயத்திற்கே
>பாரமாகவும் இருந்தார்கள். மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டுக்கொண்டு
>பயந்தே வாழ்ந்திருந்தார்கள்.
> ஆனால் போதிதர்மர் தம்முடைய சீடர்களுக்கு மூச்சுப்பயிற்சியின்
>சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார்.
> அந்தப் பயிற்சிகளின் மூலம் மனதின் இயக்கத்தையும் உடலின்
>செயல்பாட்டையும் அடக்கமுடியும். இன்னொரு பயிற்சியின்மூலம்
>உடலை வலுவாக்கி அசுரபலத்தைப் பெறமுடியும். மனதை தீட்சண்யமாகச்
>செயல்படுத்த முடியும்.
> உடற்பயிற்சிகளையும் சொல்லிக்கொடுத்தார்.
>
> அவர்களுக்கு விவசாயம், சிறுதொழில்கள் போன்றவற்றைச்
>செய்யச் சொல்லிக்கொடுத்தார். தங்களது கோயில்களைச்
>சுற்றிலும் தங்களுக்குத் தேவையான உணவை அவர்களே
>விளைவித்துக்கொண்டார்கள்.
> சமுதாயத்திடம் பிச்சையெடுப்பதில்லை.
> உடல் உறுதி அசுரபலம் ஆகியவற்றைக்கொண்டு சில
>தற்காப்பு முறைகளயும், தாக்குதல் முறைகளையும், ஆயுதங்களிலிருந்து
>பாதுக்காத்துக்கொள்ளும் முறைகளையும், உடலில்காயம் ஏற்படா
>முறைகளையும் கற்றுக்கொடுத்தார்.
> பிற்காலத்தில் புத்தபிக்குக்கள், சமுதாயத்தின் உழைப்பின்
>பலன்களையெல்லாம் பிடுங்கித் தின்றுவிடுகிறார்கள் என்ற ஆத்திரத்தோடு
>சீனச்சக்கரவர்த்திகள் சிலர், பிக்குக்களை அடித்துக் கொல்வித்தபோது
>போதிதர்மரின் சீடபரம்பரையும் கோயில்களும் மட்டும் தப்பின.
>
> அவ்வாறு போதிதர்மர் தோற்றுவித்த பௌத்தக்கோயில்களை
>ஷாஓலின்(Shaolin) கோயில்கள் என்பார்கள்.
>
>அன்புடன்
>
>ஜெயபாரதி
>
>
>
>> அவர் காஞ்சிபுரத்துக்காரர் என்று சொல்வார்கள். காஞ்சியில்
>>இருந்த பல்கலைக்கழகத்தில் அவர் படித்திருக்கிறார்.
>>
>>
>> போதி தர்மரிடம் திரும்புவோம். அவர் காஞ்சிபுரத்தின் பிராமணக்
>>குடும்பம் ஒன்றில் பிறந்து பௌத்தராகிக் காஞ்சியின் பௌத்த சங்கத்தில்
>>இருந்துவிட்டு அங்கிருந்து வடக்கே நலாந்தாவுக்குச்சென்று, அங்கிருந்து
>>சீனாவுக்குச் சென்றார் என்று சொல்வார்கள்.
>> மதுரையைச் சுற்றி பௌத்தக் குடியினர்நிறைய வசித்த சில
>>ஊர்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று தற்சமயம் 'கருங்காலக்குடி'
>>என்ற பெயரில் இருக்கிறது. ஈராயிரம்ஆண்டுகளுக்கு முன்னர் அது
>>'எருக்காட்டூர்'. மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து
>>முப்பது கீலோமீட்டரில் தொலைவில் இருக்கும். அந்த ஊரில் ஐம்பது
>>ஆண்டுகளுக்குமுன்புவரை பௌத்தத்தின் சுவடுகள் இருந்திருக்கின்றன.
>>இப்போதும்கூட கருங்காலக்குடியின் மிக அருகில் 'பூத மங்கலம்'
>>என்றொரு சிற்றூர் இருக்கிறது. பூதமங்கலம் வேறொன்றுமில்லை.
>>'புத்தமங்கலம்'தான். அதுபோலவே 'சீனமங்கல'மும் இருந்திருக்கிறது.
>>ஜினமங்கலம்@சினமங்கலம். சமணர்களின் ஊர்.
>> போதி தர்மர் அந்த ஊரில் பிறந்தவர் என்ற செவி வழிச்செய்தி
>>அங்கு வழங்கியது. அந்த வட்டாரத்தில் முத்துக்கோனார் என்னும்
>>ஓய்வுபெற்ற கல்வியதிகாரி ஒருவர் இருந்தார். அவர் கப்பலூர் கரியமாணிக்கன்
>>கோவையைப் பற்றி அரிய ஆராய்ச்சிகள் செய்தவர். சங்க காலத்தின்
>>காலத்தைப் பற்றியும் ஆழமான ஆராய்ச்சிகள் செய்திருந்தார்.
>போதிதர்மர் கருங்காலக்குடியைச் சேர்ந்தவர் என்று முத்துக்கோனார்
>சொல்வார்.
>>
>>அன்புடன்
>>
>>ஜெயபாரதி
>>
==========================>

 X-Apparently-To: jaybee555@yahoo.com via 206.190.38.201; Wed, 31 May 2006 07:57:14 -0700
X-Originating-IP: [209.73.160.89]
Authentication-Results: mta342.mail.mud.yahoo.com
  from=yahoogroups.com; domainkeys=pass (ok)
Comment: DomainKeys? See http://antispam.yahoo.com/domainkeys
DomainKey-Signature: a=rsa-sha1; q=dns; c=nofws; s=lima; d=yahoogroups.com;
b=hSebwFGs707yaA+ChtRU441669SmjfDn24ygEGMkCuLg20XL/ZEo9g2wvV7/Ubwoz45zq+J7pGLtWaFg4qK+iijkwNCxFF5UJrYjG36XlxkhXlfp2h695WzVuArJSz4x;
X-Yahoo-Newman-Id: 1024082-m35642
X-Sender: jaybee555@yahoo.com
X-Apparently-To: agathiyar@yahoogroups.com
Comment: DomainKeys? See http://antispam.yahoo.com/domainkeys
To: agathiyar@yahoogroups.com
User-Agent: eGroups-EW/0.82
X-Mailer: Yahoo Groups Message Poster
X-Originating-IP: 209.73.160.85
X-Yahoo-Post-IP: 218.111.0.221
From: "jaybee555" <jaybee555@yahoo.com>
X-Yahoo-Profile: jaybee555
Sender: agathiyar@yahoogroups.com
Mailing-List: list agathiyar@yahoogroups.com; contact agathiyar-owner@yahoogroups.com
Delivered-To: mailing list agathiyar@yahoogroups.com
List-Id: <agathiyar.yahoogroups.com>
List-Unsubscribe: <mailto:agathiyar-unsubscribe@yahoogroups.com>
Date: Wed, 31 May 2006 14:54:33 -0000
Subject: [agathiyar] Siddhars -#?15
Reply-To: agathiyar@yahoogroups.com




இப்போது இன்னொரு சமயத்தைச்சேர்ந்த சித்தரைப் பற்றிச்
சொல்கிறேன்.
இவரும் பௌத்தர்தான். சில மடல்களுக்கு முன்னர் திபெத்திய
பௌத்த சன்னியாசிகள்/சித்தர்கள் பற்றிச் சொன்னேன்.
ஆனால் இவர் ஸென் பௌத்ததைச் சேர்ந்த சித்தர்.
பெயர் போதிதர்மா.
சீனாவில் அவர் குடியேறி அங்கு சிறப்பாக இருந்து ஸென்
பௌத்தத்தைத் தோற்றுவித்தார். அத்துடன் குங்·பூ மார்ஷியல் போரியலையும்
கண்டுபிடித்தார். ஷாஓலின் மடங்கள் கொயில்களையும் ஏற்படுத்தினார்.
அவர் மேற்கிலிருந்து வந்தார் என்று சீனர்கள் சொல்வார்கள்.

தமிழகம் சீனாவுக்கு மேற்கேதானே இருக்கிறது. அப்படியானால்
அவர் அவர்களுக்கு மேல்நாட்டார்தானே.
தமிழகத்தைவிட்டு அவர் கீழைநாட்டுக்குச் சென்றார்.
"ஏன்? ", என்பது கேள்வி.
போதி தர்மரைச் சீனர்கள் 'போ ட்டி தா மா' என்று அழைக்கிறார்கள்.
சீனர்களிடம் அவருடைய ஓவியங்களிக் காணலாம். கரிய அடர்த்தியான
புருவம், பெரிய பருத்த மூக்கு, தாடி மீசை, குண்டு விழிகள் ஆகியவற்றுடன்
அவரை வரைந்திருப்பார்கள்.  
அவர் காஞ்சிபுரத்துக்காரர் என்று சொல்வார்கள். காஞ்சியில்
இருந்த பல்கலைக்கழகத்தில் அவர் படித்திருக்கிறார். 'கல்வியில்
கரையிலா காஞ்சி' என்று அப்பர் பெருமான் வர்ணித்திருக்கிறார்.

  அவர் காஞ்சிபுரத்தின் முக்கியக் குடும்பம் ஒன்றில் பிறந்து
பௌத்தராகிக் காஞ்சியின் பௌத்த சங்கத்தில் இருந்துவிட்டு அங்கிருந்து
வடக்கே நலாந்தாவுக்குச்சென்று, அங்கிருந்து சீனாவுக்குச் சென்றார்
என்று சொல்வார்கள்.
மதுரையைச் சுற்றி பௌத்தக் குடியினர் நிறைய வசித்த சில
ஊர்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் ஒன்று தற்சமயம் 'கருங்காலக்குடி'
என்ற பெயரில் இருக்கிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அது
'எருக்காட்டூர்'. மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து
முப்பது கீலோமீட்டரில் தொலைவில் இருக்கும். அந்த ஊரில் ஐம்பது
ஆண்டுகளுக்குமுன்புவரை பௌத்தத்தின் சுவடுகள் இருந்திருக்கின்றன.
இப்போதும்கூட கருங்காலக்குடியின் மிக அருகில் 'பூத மங்கலம்'
என்றொரு சிற்றூர் இருக்கிறது. பூதமங்கலம் வேறொன்றுமில்லை.
'புத்தமங்கலம்'தான். அதுபோலவே 'சீனமங்கல'மும் இருந்திருக்கிறது.
ஜினமங்கலம்@சினமங்கலம். சமணர்களின்ஊர்.
போதி தர்மர் அந்த ஊரில் பிறந்தவர் என்ற செவி வழிச்செய்தி
அங்கு வழங்கியது.
அந்த வட்டாரத்தில் முத்துக்கோனார் என்னும்
ஓய்வுபெற்ற கல்வியதிகாரி ஒருவர் இருந்தார். அவர் கப்பலூர் கரியமாணிக்கன்
கோவையைப் பற்றி அரிய ஆராய்ச்சிகள் செய்தவர். சங்க காலத்தின்
காலத்தைப் பற்றியும் ஆழமான ஆராய்ச்சிகள் செய்திருந்தார். போதிதர்மர்
கருங்காலக்குடியைச் சேர்ந்தவர் என்று முத்துக்கோனார் சொல்வார்.

போதி தர்மரைப் பற்றி வேறு சில வரலாறுகளும் இருக்கின்றன.

அவர் சீனாவில் தொடர்ச்சியாக ஒன்பதாண்டுகள் தியானத்தில்
இருந்தாராம். ஒரு சுவற்றை நோக்கி அமர்ந்துகொண்டு அதனையே
பார்த்தவண்ணம் இருந்தாராம். ஆரம்பத்தில் தூக்கம் வந்ததாம். ஆகவே
தம்முடைய கண்களின் மேல் இரப்பைகளைப் பிய்த்து எடுத்து தூக்கி
எறிந்துவிட்டாராம். அந்த வண்ணம் அவர் கண்களை மூடாமல் தூங்காமல்
இருந்தாராம்.

  அந்த இரப்பைகள் விழுந்த இடத்தில் ஒரு செடி முளைத்ததாம்.
அந்தச் செடியின் இலைகள் காய்ந்து உலர்ந்து சருகுகளாக அங்கே
கிடந்தனவாம்.

ஒரு புத்த பிக்கு ஒருமுறை திறந்த வெளியில் அந்தச் செடி இருந்த
இடத்திற்கு அருகில் அமர்ந்து ஏதோ படித்துக்கொண்டிருந்தாராம்.
அவர் எப்போதுமே வெந்நீர்தான் குடிப்பவர். அந்த வெந்நீர்ப் பாத்திரத்துக்குள்
அந்தச் செடியின் சருகுகள் காற்றால் அடித்துக்கொண்டுவரப்பட்டு
விழுந்துவிட்டனவாம். நீரை வீணாக்க விரும்பாத புத்த பிக்கு, அந்தச்
சருகுகளை எடுத்தெறிந்துவிட்டு, அந்த வெந்நீரைப் பருகினாராம்.

அதனைப் பருகியதும் உடல் சுறுசுறுப்பாகவும் மனது தெளிவாகவும்
இருந்ததாம். அதுவரைக்கும் அழுத்திக்கொண்டிருந்த சோம்பல் தூக்கம்
ஆகியவை சென்ற இடம் தெரியாமல் ஓடி மறைந்துவிட்டனவாம்.

அந்தச்செடியை ஆராய்ந்து பர்த்துவிட்டு, அதன் இலைகளைப்
பானமாக்கி குடிக்கும் வழக்கத்தைத் தாமும் மேற்கொண்டுவிட்டு
சீனாவிலும் அந்த பிக்கு பரப்பிவிட்டாராம்.

அப்படித் தோன்றியதுதான் தேயிலையாம்.
போதிதர்மரின் கண்ணிமைகள்.

போதிதர்மர் சீனாவில் இருந்த காலத்தில் புத்தபிக்குகள் பிச்சை
எடுத்துக்கொண்டு பலவீனமானவர்களாகவும் சமுதாயத்திற்கே
பாரமாகவும் இருந்தார்கள். மற்றவர்களால் துன்புறுத்தப்பட்டுக்கொண்டு
பயந்தே வாழ்ந்திருந்தார்கள்.
ஆனால் போதிதர்மர் தம்முடைய சீடர்களுக்கு மூச்சுப்பயிற்சியின்
சில நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார்.
அந்தப் பயிற்சிகளின் மூலம் மனதின் இயக்கத்தையும் உடலின்
செயல்பாட்டையும் அடக்கமுடியும். இன்னொரு பயிற்சியின்மூலம்
உடலை வலுவாக்கி அசுரபலத்தைப் பெறமுடியும். மனதை தீட்சண்யமாகச்
செயல்படுத்த முடியும்.
உடற்பயிற்சிகளையும் சொல்லிக்கொடுத்தார்.
அத்துடன் அரிய நுட்பக்கலையான வர்ம சாஸ்திரத்தையும்
சொல்லிக்கொடுத்தார்.

அவர்களுக்கு விவசாயம், சிறுதொழில்கள் போன்றவற்றைச்
செய்யச் சொல்லிக் கொடுத்தார். தங்களது கோயில்களைச் சுற்றிலும்
தங்களுக்குத் தேவையான உணவை அவர்களே விளைவித்துக்கொண்டார்கள்.
சமுதாயத்திடம் பிச்சையெடுப்பதில்லை.
உடல் உறுதி அசுரபலம் ஆகியவற்றைக்கொண்டு சில
தற்காப்பு முறைகளையும், தாக்குதல் முறைகளையும், ஆயுதங்களிலிருந்து
பாதுக்காத்துக்கொள்ளும் முறைகளையும், உடலில் காயம் ஏற்படா
முறைகளையும் கற்றுக்கொடுத்தார்.
பிற்காலத்தில் புத்தபிக்குக்கள், சமுதாயத்தின் உழைப்பின்
பலன்களையெல்லாம் பிடுங்கித் தின்றுவிடுகிறார்கள் என்ற ஆத்திரத்தோடு
சீனச்சக்கரவர்த்திகள் சிலர், பிக்குக்களை அடித்துக் கொல்வித்தபோது
போதிதர்மரின் சீடபரம்பரையும் கோயில்களும் மட்டும் தப்பின.

அவ்வாறு போதிதர்மர் தோற்றுவித்த பௌத்தக்கோயில்களை
ஷாஓலின்(Shaolin) கோயில்கள் என்பார்கள்.

இந்த இலக்கில் போதி தர்மரின் சீன மரபு ஓவியத்தைக்
காணலாம் -

http://www.geocities.com/arthur_avalon/bodhidharma.jpg

அன்புடன்

ஜெயபாரதி

==================



Saturday, August 30, 2014

ARCHEOLOGY-U.TRGN

ARCHEOLOGICAL REMNANTS IN ULU TRENGGANU




ஊலூ தரெங்காணு மாவட்டத்துக் காடுகளில் எங்கோ ஓரிடத்தில் பொன் மயமான நகாரா எமாஸ் என்னும் நகரம் இருந்தது என்பது ஒரு கர்ண
பரம்பரைச் செய்தி. கிட்டத்தட்ட அது இன்ன இடத்தில்தான் இருந்திருக்க வேண்டும் என்று ஊகித்திருந்தேன். அதன் நிமித்தமே படகில் 
சுங்கை தரெங்காணு ஆற்றின் உட்புறமாகச் சென்றது. அப்போது அந்த 
குத்துக் கற்பாறைகள் மேலும் செல்வதைத் தடுத்தன. 
புக்கிட் கப்பல் என்னும் இடமும் அந்த ஆற்றின் கிளை நதிகளில் 
ஒன்றை ஒட்டித்தான் இருந்தது. 
இப்போது ஊலு தரெங்காணுவின் கால்வாசி நிலம் ஒரு செயற்கை 
ஏரிக்குள் மூழ்கிக் கிடக்கிறது. 
கென்யிர் என்னும் அந்த ஏரிதான் தென்கிழக்காசியாவிலேயே மிகப் 
பெரிய செயற்கை ஏரி.
அதைக் கட்டுவதற்காகக் காடுகளை அழித்த போது ஓரிடத்தில் 
புராதனக் கட்டடச் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 

ஆனால் அங்கு யாரையும் அனுமதிக்கவில்லை. தகவல்களையும் 
வெளியிடவில்லை. அந்த நகாரா எமாஸ் நகரின் எச்சங்கள் இவை 
என்று தீர்மானிக்க இயலவில்லை. 
இப்போது சுத்தமான ஏரியல் ·போட்டிகிரா·பி, ஸாட்டலைட் 
இமேஜ் ஸ்டடி, ரிமோட் ஸென்ஸிங் போன்ற டெக்னாலஜியை வைத்து 
ஆராய முயற்சிக்கலாம். 
அங்க்கோர் வாட் பிரதேசத்திலும் இந்த மாதிரி ஆய்வுகள், எக்ஸ் ரேய், 
ராடார் முதலியவை உட்பட்ட பல வித டெக்னாலஜிகளைப் பயன்படுத்திப் 
பார்த்தார்கள். இப்போது நமக்குத் தெரியும் அங்க்கோர் போல இன்னும் 
நான்கு மடங்கு அளவுக்கு அந்த நகரம் பரவியிருந்ததைக் கண்டு
பிடித்துள்ளார்கள்.
ஆனால் மலேசியாவில்?
இந்த நகாரா எமாஸ¤ம் இன்னொரும் கோத்தா கெலாங்கியாக 
ஆக்கப்படும். கோத்தா கெலாங்கி?
கீழ்க்கண்ட லின்க்கில் பார்க்கவும் - 


எந்தப் பாதையில் அந்த நகாரா எமாஸ் நகரத்துக்குப் போயிருப்பார்கள்? இது இன்னொரு மர்மம். அதற்கும் ஏதோ ஒரு விடுப்பு கிடைத்தது. ஆனால் 
அப்போது அல்ல.
இன்னொரு சமயம். வேறோர் இடத்தில்.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Friday, August 29, 2014

ARCHEOLOGY


ARCHEOLOGICAL RESEARCH IN
TRENGGAANU
தரெங்காணு மாநிலத்தின் 
ஊலு தரெங்காணு மாவட்டத்தின் 
குவால பெராங் ரூரல் ஹாஸ்ப்பிட்டல் தலைமையக அலுவலர்கள்
1974



நடுநாயகமாய் டாக்டர் ஜெயபாரதி (ஜேய்பி)



சீனச் சாயலில் காக்கேஸியன் தன்மைகளுடன் கூரிய நாசியும் நெளிநெளியான தலைமுடியும் காஃபி கலர் கண்களும் கொண்ட ரஷீத்

Wednesday, August 27, 2014



ULU TRENGGAANU
இவ்வளவு சிரமப்பட்டும் தேடியது ஏது கிடைக்கவில்லை என்ற 
ஆதங்கம் கொஞ்சம்கூட இருக்கவில்லை. 
தரெங்காணு ஆறு குவால பெராங்கிலிருந்து மேற்கே செல்லும். 
இன்னொரு பெரும் கிளை வடக்கே செல்லும். வடக்கே செல்லும் 
கிளையின் கரையில்தான் அந்த புக்கிட் கப்பால் என்னும் இடமும் 
இருக்கிறது.
இப்போது இருப்பது போல ஜியாக்ர·பி, ஜியோமார்·பாலஜி போன்றவை 
அந்தக் காலத்தில் இருக்கவில்லை. மாறியிருந்தன.
பல காரணங்கள். 
அடிக்கடி காடு, காடு என்று சொல்லிக்கொண்டே இருக்கிறேன். 
இந்தக் காடுகள் சாதாரணக் காடுகள் இல்லை. 
Tropical Jungles, Verdant Jungles என்னும் வகையைச் சேர்ந்தவை.
மரங்கள் மிகவும் பருமனாகவும் மிக உயரமாகவும் இருக்கும். கிளைகள் மிக முரடாக அகன்று, விரிந்து பல அடிகள் சென்றிருக்கும். அந்தக் கிளைகளும் மிகவும் பருமனாக இருக்கும். அவற்றிலிருந்து ஆயிரக்கணக்கான இரண்டாந்தரக் கிளைகள், அவற்றின் கிளைகள் என்று பரவியிருக்கும். 
இன்னொரு அதிசயமும் உண்டு
மரங்களில் கிளைகளில் Ferns என்று சொல்லப்படும் நூற்றுக்கணக்கான தாவரவகைகள் இருக்கும். பெரிய கிளைகளின் மீது பல நூறு ஆண்டுகளாக மக்கிப்போன இலைகள், கிளைகள், சருகுகள் என்று சேர்ந்து கிடக்கும். இவற்றை ஊட்டமாகக் கொண்டு அந்தக் கிளைகளின்மீதே இன்னும் பல மரங்கள் வளர்ந்திருக்கும். அந்த மரங்களிலும் பலவகையான சிறு மரங்கள், செடிகள் என்று லட்சக் கணக்கில் வளர்ந்திருக்கும். 
வெய்யிலுக்காகப் போட்டி போட்டுக்கொண்டு எல்லாமே உயரத்தைப் 
பிடிக்கப் பார்த்திருக்கும்.
மரங்களின் உச்சிகள் எல்லாம் சேர்ந்து விதானம்போல் தரையே 
தெரியாத வண்ணம் மூடியிருக்கும். இதை Canopy என்பார்கள்.
ஆள் நடமாட்டமே இல்லாத காடுகள். பல நூற்றாண்டு காலமாக 
மரங்களின் கேனொப்பியின் கீழே இலை தழை கொப்பு கொம்பு என்று 
விழுந்து அப்படியே மக்கிப்போயிருக்கும். அது சொதசொதப்புடன் ஒரு மாதிரி கள் வாடை அடித்தவாறு விளங்கும். மண் மாதிரி இருக்கும். இதன்மேல் மிதித்தால் இடுப்புவரைக்கும் அமிழச்செய்துவிடும். இதை Muck என்பார்கள்.
இந்த மாதிரி காடுகள்தாம் அந்தக் காலத்தில் இருந்தன. 
இவற்றில் இன்னும் சில மர்மங்களும் இருந்தன.....

       தரெங்காணு காடுகளைப் பற்றி கொஞ்சம் சொன்னேன்.
அந்த மாதிரியான காடுகள் - Verdant Tropical Jungles என்பவை தனி 
மாதிரியான Ecosystem. 
ஆனால் என்னுடைய கருத்தில் ஒவ்வொரு மரமும் ஒரு தனிப்பட்ட Ecosystemதான். ஒவ்வொரு மரத்திலும் ஆயிரக்கணக்கான ஜீவராசிகள்- 
பூச்சிகள், ஊர்வன, பறப்பன, மிருகங்கள், பூஞ்சைக்காளான்கள், பாசிகள், 
Ferns, ஒட்டுண்ணிகள் என்று ஒவ்வொரு மரமும் ஒரு தனிப் பிரபஞ்சம் - Cosmosதான்.
இந்த மாதிரியான காடுகளை வெட்டும்போது ஈடு செய்யமுடியாத 
நஷ்டம் இந்த உலகத்துக்கு ஏற்படுகிறது. சேதாரம் அதிகம். Wastage. 
ஒரு பெரிய மரத்தை வெட்டினால் அதன் நடுத்தண்டு மரத்தை மட்டும் வெட்டி எடுத்துகொள்வார்கள். மற்றபடிக்குக் கிளைகள், வேர்கள் எல்லாம் வெட்டிப் போடப்பட்டுவிடும். 



பாலாக் எனப்படும் மரங்கள்

ஒரு பெரிய மரத்தின் 10 சதவிகிதம் மட்டுமே இந்த Loggers-களால் 
எடுத்துக்கொள்ளப்படும். மீதி 90 சதவிகிதத்தை எரித்துவிடுவார்கள். 
இப்படிப்பட்ட எரிப்புகளால் மொத்த காடுகளுக்கும் பெரும் சேதம்.
காடுகளை வெட்டுவதால் ஆக்ஸிஜன் குறைகிறது. கார்பன் 
டையாக்ஸைட் கூடும். எரிப்பதால் இன்னும் அதிகமாக ஏற்படும். இந்தப் 
புகை நாடு முழுவதிலும் பரவும். 
Reforestation என்பது அறவே கிடையாது. புகை மூட்டத்தால் பல 
பெரிய நகரங்களில் மக்கள் மூச்சுவிடப் போராடுகிறார்கள். 
சாடாம் ஹ¤ஸைனைப் பற்றி ஜார்ஜ் புஷ் சொன்னமாதிரி, "He can hide. 
But he cant run". 
ஆனால் அதுகூட புகை மூட்டத்திடம் முடியாது. ஒளிந்துகொள்ளவும் 
முடியாது. ஓடவும் முடியாது. ஏனென்றால் இந்தப் புகை மூட்டம் ஒவ்வோர் ஆண்டும் நான்கைந்து மாதங்களுக்காவது நீக்கமற நிரம்பி நிற்கும்.


மாநகரத்தில் புகைமூட்டம்

நான் பார்த்த அந்த தரெங்காணு இப்போது இல்லை.
இன்னும் பல இடங்களில் காடுகளை வெட்டி அந்த இடத்தில் Oil Palm 
தோப்புகளை உருவாக்குகிறார்கள். பல இடங்களில் ரோடுகள் 
போட்டிருக்கிறார்கள். 
குவாலா பெராங் ஊர் இருக்கும் ஊலூ தரெங்காணு மாவட்டம் ஆயிரம் சதுர மைல்கள் கொண்டது. 
அதில் இப்போது கால்வாசி கென்யிர் ஏரியாக உருவாகி நீரில் 
மூழ்கிவிட்டது.


மூழ்கிக்கொண்டிருக்கும் கம்பங்கள்


புதிதாக 2007க்குப் பின் தோன்றிய கென்யிர் ஏரி

பல கோடிக்கணக்கான ஜீவராசிகள் அழிந்துபோயிருக்கும். 
அந்த பொன்மயமான நகாரா எமாஸ் நகரமும் அழிந்துபோயிருக்கலாம்.


காடுகளை வெட்டியபோது கண்டுபிடிக்கப்பட்ட ஏதோ ஒரு புராதன கட்டடத்தின் சிதைவுகள்



$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$


Monday, August 11, 2014

WARISAN JOURNAL


          WARISAN KELANTAN JOURNAL





WARISAN KELANTAN COVER PAGE REFLECTING KELANTANESE CULTURE.




FRONTISPIECE




PENINSULAR MALAYA





ஸ்ரீவிஜயத்தின் புராதன கரைகள். 


கோத்தாக் காப்புர் (கற்பூரக் கோட்டை) கல்வெட்டு.
புராதன பல்லவ கிரந்தம்
மொழி: சமஸ்கிருதமும் புராதன மலாயும்.
சக ஆண்டு 608
கிபி. 680.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$



Wednesday, May 28, 2014

TONGKANG

                            TONGKANG

தோணி என்னும் சிறு கப்பல்கள்



என் தந்தையார் எஸ்.கே.எஸ் சின்னமுத்து பிள்ளையவர்கள் மேடான் நகர் மோஸ்க்கீ ஸ்த்ராட், நான்காம் நம்பருக்கு முழு முதலாளியாக இருந்ததால் கிட்டங்கி ஸிஸ்டம் அங்கு கடைபிடிக்கப் படவில்லை. அங்கு 1936க்குப்  பின்னர் இருந்தவர்கள் எல்லாம் என் தந்தையாரின் உறவினர்களும் ஊர்க்காரர்களும்தான். 
தந்தையார் 1936க்கு முன்னாலேயே பினாங்கில் பிஷப் ஸ்ட் ரீட்டில் 
முப்பதொன்றாம் நம்பரை வாடகைக்கு எடுத்திருந்தார். அதுவும் ஒரு மிக 
நீளமான அகலமான ஷாப் ஹவுஸ்தான். மாடியும் இருந்தது.
இந்தக் கட்டடத்தில் பெரும்பகுதி கோடவுனாக இருந்தது. ஹோல்ஸேல் 
ரீட்டேய்ல் விற்று வரவும் இருந்தது. 
அப்பாவுக்கு நான்கைந்து வகை பிஸினஸ்கள். லேவாதேவி மார்க்காக்களே  ஆறு இருந்தன. 
அவைபோக ஏற்றுமதி இறக்குமதி இருந்தது. சுமாத்ராவில் ஏராளமாக 
சாம்பிராணி, ஏலம், கிராம்பு, லவங்கப்பட்டை, தாளிசபத்திரி, மிளகு, இன்னும் சில மருந்துப்பொருட்கள், ஆமை ஓடு, முதலை எண்ணெய், மான் கொம்பு, மர்க்கீஷாப் பழம் போன்றவற்றை வாங்கி நாலாம் நம்பரில் வைத்திருந்து, அவற்றைச் சிப்பம் என்னும் பேல்களில் கட்டி, அவற்றை மேடானிலிருந்து இருபத்து நான்கு மைல் தூரத்திலிருந்த பெலாவான் என்னும் துறைமுகத்தில் தொங்க்காங் என்னும் சிறு கப்பல்களில் ஏற்றி பினாங்குக்கு அனுப்புவார்கள். 
தொங்காங்க் என்பனவற்றைத் தமிழர்கள் தொங்கான் என்று 
குறிப்பிடுவார்கள். ஒற்றைப் பாய்மரம் நடுவிலும் முகப்பில் இன்னொரு பாய் 
பின்னால் சிறிய பாயும் இருக்கும்.
பெலாவானின் நேர் வடக்கே கடல் கடந்து நூற்றைம்பது மைல் தூரத்தில் பினாங்கு இருந்தது. அங்குள்ள ஸ்வெட்டென்ஹாம் பியர் என்னும் துறையில் தொங்கான் வந்தணையும். அங்கிருந்து நடைதூரம்தான் - பிஷப் ஸ்திரீட் முப்பத்தொண்ணாம் நம்பர்.
பினங்கில் சிப்பம்கள் பிரிக்கப்பட்டு, சரக்குகள் தேவைக்கேற்ப வேறு சிப்பங்களாகக் கட்டப்பட்டு சென்னைக்கு அனுப்பப்படும். அங்கு 
சித்தார்கோட்டை பி அஹ்மட் அண் ஸன்ஸ் தம்பு செட்டித் தெருவில் 
வைத்திருந்த கொடவுனுக்குச் சென்று விடும். 
மதராஸிலிருந்து பளையகாட் கைலிகள், மல் வேட்டி, குண்டஞ்சு நாலு முழ வேட்டி, சேலைகள் தஞ்சாவூர் அபிரஹாம் பண்டிதர் தயாரித்த 
கருணானந்தர் மூலிகை மருந்துகள் போன்றவை பினாங்குக்கு அனுப்பப் படும். 
அங்கிருந்து மேடானுக்கு வந்து சேரும்.
1927-இல் மேடான் சென்றவர் 1937-இல் ஒரு மில்லியனேராக இருந்தார். 
தங்கக் காசுகள் பரிவர்த்தனை வேறு இருந்தது. 

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$