Wednesday, March 21, 2012

Golden Era And Paradigm Shift

அன்பர்களே,


ஏற்கனவே அகத்தியத்தில் எழுதிய பழைய மடலின் ஒரு சிறு பகுதியின் ஆரம்பப் பாராக்களை
அம்ட்டும் எடுத்துக்கொண்டு இப்போதைய சூழ்நிலைகளை வைத்து சிறிய 'ஸாம்போஙான்' -
தொடர்ச்சியை எழுதியிருக்கிறேன்.


>>>>>>>>>>>>>>>.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்கால், இருபதாம் நூற்றாண்டின் முற்பாதி ஆகியவற்றில் உள்ள
காலகட்டம் தமிழர்களின் பொற்காலம் போல் தோன்றுகிறது.
புறநானூறு நூலை அய்யரவர்கள் பதிப்பித்த ஆண்டிலிருந்து அந்தக் காலகட்டத்தின் ஆரம்பத்தைக் கொள்ளலாம். 1870களிலிருந்து கொள்ளலாம்.
தமிழ் உணர்வு, சுயமரியாதை ஆகியவை அந்தக் காலகட்டத்தில் Momentum என்பதைக்
கொண்டிருந்தன. வெகு விரைவாக பல துறைகளில் அந்த மொமெண்ட்டம் அதிகரித்துக்கொண்டே
போனது.
இந்தக் காலகட்டம் தீர்க்கமான நுணுக்கமான ஆய்வுக்குரியது.


இந்தக் காலகட்டத்தில் தமிழர்களின் வாழ்க்கைப் போக்கில் பல்முனைகளில் ஏற்பட்டுக்
கொண்டிருந்த மாற்றங்கள், அவற்றின் காரணங்கள், அவற்றை ஏற்படுத்தியவர்கள், அவர்களின்
பின்னணிகள், அவர்களின் தொண்டுகள், அவர்களின் வாழ்வியல் கோட்பாடுகள், தர்மங்கள், அந்த
மாற்றங்களின் தாக்கங்கள், அவற்றின் விளைவுகள், அவற்றின் பின்விளைவுகள், By-Products
போன்றவற்றை நுணுகி ஆராயவேண்டும். இவற்றிற்கு BackDrop and BackGround ஆக இருந்த
காலதேசவர்த்தமான, சமய, சமுதாய, மொழி, அரசியல் பின்னணிகளையும் நன்கு அறிந்துகொள்ள வேண்டும்.
இந்தக் காலகட்டத்தையும் காலத்தின் ஓட்டத்தையும் தவறாமல் ஆராயவேண்டும்.
பாரடைம் என்றொரு சொல்லைச் சில ஆண்டுகளுக்கு முன்னர் கேள்விப்பட்டிருப்பீர்கள்.
Paradigm என்னும் அந்தச் சொல் சில ஆண்டுகளுக்கு முன்னர் அடிக்கடி உச்சரிக்கப்பட்ட சொல்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


<ஸாம்போஙான்>
Paradigm Shift என்னும் சொலவடையும் அடிக்கடி பேசப்பட்டது.
Alvin Toffler-ருடைய Third Wave, Future Shock, Power Shift ஆகிய நூல்களில் இது
அதிகமாகப் பேசப்படும். அதுவும் முக்கியமாக Power Shift-இல் காணலாம்.
ஒரு பெரிய பின்னடைவு என்னவென்றால் இத்தகைய நூல்கள் தமிழில் எழுதப்படவில்லை.
என்னுடைய வருங்காலவியல் நீள்தொடரில் நான் இதைப்பற்றி எழுதியிருக்கிறேன்.


Future Shock - அதன் பிரதிபலிப்பாக ஏற்படும் Culture Shock ஆகியவற்றுக்கு நல்ல
உதாரணத்தைச் சில நாட்களுக்கு முன்னர் யூட்டியூபில் பார்த்திருக்கலாம்.


சிங்கப்பூரில் இந்துத் தமிழர்களின் ஒரு திருமணக்காட்சி.
பரிசம் போடுகிறார்கள் போலும். அந்த நிகழ்வுக்கு மணப்பெண் சில தடிப்பசங்களுடன் ஆடிக்
கொண்டே வருகிறாள். மணமேடையை நெருங்கியதும் இருப்பதிலேயே ரொம்பவும் ரௌடிய வடிவுடன்
விளங்கியவன் அந்தப் பெண்ணின் கையைப்பிடித்து மணப்பெண்ணைச் சுழற்றி விடுகிறான். அவளும் சுழன்றுகொண்டூ மணமேடைக்குச் செல்கிறாள். இதைப் போய் 'அட்டகாசமான வருகை' என்று
சிலாகித்து வர்ணித்திருந்தார்கள்.
ஆகவேதான் அடிக்கடி சொல்கிறேன். அந்த எழுபத்தைந்து ஆண்டுகளோடு ஒரு சிறு பொற்காலம் முடிந்துவிட்டது.
1971-க்குப் பின்னர் மிகப் பெரிய தேய்மானமும் பின்னடைவும் ஏற்பட்டுவிட்டன.
அதன் உச்சகட்டம்தான் கோவையில் நடைபெற்ற 'செம்மறி மாநாடு'.


>>>>>>>>>>>>>>>>>
இப்போது தமிழியம், தமிழர்கள், தமிழ்ப்பண்பு, கலாச்சாரம், மனப்பான்மை ஆகியவற்றைப்
பார்க்கும்போது நமக்கு தற்காலத்துக்கு ஏற்றதொரு பாரடைம் மிக மிகத் தேவையாகத் தெரிகிறது.


அந்த மாதிரியான பாரடைம்களைச் சிருஷ்டிசெய்துகொள்வதற்கு மேற்குறிப்பிட்டுள்ள ஆய்வு தேவைப்படுகிறது.
எல்லாவற்றிற்கும் மேலாக - முதலாவதாக, ஒன்று அதிகம் தேவைப்படுகிறது.
Commitment.


அன்புடன்


ஜெயபாரதி

No comments:

Post a Comment