Friday, May 31, 2013

SOMETHING LOST


          ஏதோ தொலைந்துவிட்டது


ஒரு காலத்தில் "எப்படா குமுதம் பத்திரிக்கை வரும்? 'யவனராணி' படிக்கலாம்? என்ற ஆவலோடு காத்திருந்ததுண்டு. அதைப் படித்துவிட்டு மருத்துவக் கல்லூரியில் அதைப் பற்றி ஒவ்வொரு வாரமும் டிஸ்கஷன் வைத்துப் பேசிக்கொண்டிருப்போம்.  கிட்டத்தட்ட 40 % மாணவர்கள் படித்திருப்பார்கள். 
அரட்டைகளின் மையக்கருத்துக்களில் ஒன்றாக யவனராணி விளங்கியது. பொதுவாகவே சாண்டில்யன் கதைகளை இளைஞர்கள் மிகவும் விரும்பிப் படிப்பார்கள். For obvious reasons. 
அந்தக் காலத்தில் குமுதம் வியாழன், வெள்ளி, ஏதோ ஒரு நாளில் வெளிவரும். வார இறுதிக்குச் சரியாக இருக்கும். 
ஆனால் யார் அந்த மாதிரி காத்திருந்தார்? உடனேயே  படித்து விட்டுத்தான் மறுவேலை. 
நோட்ஸ¤க்குள் வைத்துக்கொண்டு பேத்தாலஜி லெக்சர் கிலாஸில் வைத்துப் படிப்பவர்கள் இருந்தார்கள். 
குமுதம், ஆனந்தவிகடன் படிப்பதற்கென்று சில பாடங்களின் லெக்சர் கிலாஸ்கள் இருந்தன. 
மதுரை மருத்துக் கல்லூரி லெக்சர் ரூம்கள் ஒரு வசதியைக்
கொண்டிருந்தன. படிப்படியாக உயரமாக அதன் டெஸ்க் இருக்கைகள் 
அமைந்திருக்கும். கடைசி டெஸ்க் தூரத்தில் இருக்கும். அதன் அருகே இன்னொரு கதவு இருக்கும். அது எப்போதும் திறந்தே கிடக்கும். யாராவது கதவைக் கழற்றி விட்டிருப்பார்கள்.
"அல்ல்ல்ல்ல்..... வெவரமான பயடா நீ......!" என்று அந்தக் காலத்து மதுரை மருத்துவக் கல்லூரி குழூஉக்குறியில் பாராட்டப்பட்ட எவனாவது 'வெவரமான பய' அந்தத் தர்மக் கைங்கர்யத்தைச் செய்திருப்பான். 
குமுதம் படிப்போர் சங்கம் எப்போதும் அந்தக் கடைசி டெஸ்க்கின் நடுப்பகுதியில் அமர்ந்திருக்கும். ஓடிப்போவோர் சங்கம் டெஸ்க்கின் ஓரங்களில் இருக்கும். 
"ஏம்ம்ப்பூஊ..... இப்ப்டி மறச்சு மறச்சு வச்சு யவனராணியப் படிக்கிறியே....  அதோட த்ரில் விட்டுப் போயிராதோ?" என்று கேட்டால்.......
"தோ பார். அதுலதான் திரில்லே இருக்குல்ல. கையில பென்ஸில வச்சுக்கிட்டு அதோட மேல் நுனிய மட்டும் அசயிற மாரி சுத்திக்கிட்டே குமுதத்தப் படிப்பம்ல. எவனும் கண்டுக்க மாட்டான்ல. நாம சொல்றத ரொம்ப ஸீரியஸா எழுதிக்கிட்ருக்கான்னுட்டு நெனப்பாங்க்யல்ல. ரொம்ப சொங்கிஹதான் மாட்டுவாங்க்ய". 
இப்போதும் இந்த வயதில் அதே யவனராணியை அதே வேகத்தோடு அவசரத்தோடு ஆர்வத்தோடு ஈடுபாட்டோடு படிக்கமுடியுமா? 
முடியாதுதான்.
ஏதோ தொலைந்துவிட்டது.

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

Friday, May 17, 2013

MUHAIYADDIN AANDAVAR



முஹையத்தீன் ஆண்டவர் 

(சில குறிப்புகள்)


இஸ்லாமிய சமயத்தில் ஸூஃபி மார்க்கத்தில் சில பாதைகள் உள்ளன. இந்தப் பாதைகளை 'தரீக்கத்' என்பார்கள்.

முஹையத்தீன் ஆண்டவர் தற்காலத்து ஈராக் நாட்டின் ஜிலான் என்னும் இடத்தில் கிபி 1077-இல் தோன்றியவர்.

இவர் தமிழர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். தமிழ் இலக்கியத்தில்
நிறைய இடம் பிடித்திருப்பவர்.

இவரைத்தான் முஹைதீன் ஆண்டவர் என்று தமிழர்கள் அழைப்பார்கள்.

அவருடைய தர்கா பழனியில் இருக்கிறது. பழனியாண்டவர்
கோயிலுக்குள்.

அவருடைய முழுப்பெயர்  ஷேய்க் முஹ்யிதீன் அப்துல் காதிர்
அல் ஜிலானி அல் ஹஸானி அல் ஹ¤ஸேய்னி என்பது. முஹம்மது நபிகள்(சல்) அவர்களின் நேரடி வாரிசு என்பதால் அல் ஹஸானி அல்
ஹ¤ஸேய்னி என்ற பெயர்கள்.

பதினெட்டு வயதாகும்போது அக்காலத்து உலகின் மிகச் சிறந்த
மாநகரங்களுள் ஒன்றான பாக்தாத் நகருக்குச் சென்று அங்கிருந்த
உலகின் சிறந்த ஆசிரியர்கள் சிலரிடம் பயின்றார். இஸ்லாமின் பல
சித்தாந்த்தங்களையும் ஆசார அனுஷ்டானங்களையும் ஓர் ஆசிரியரிடமும்
இஸ்லாமிய ஞானமார்க்கத்தை இன்னொரு ஆசிரியரிடம் கற்றார்.

அதன் பிறகு ஈராக்கின் பாலைவனப் பகுதிகளில் இருபத்தைந்தாண்டு
அலைந்து திரிந்தார். ஐம்பது வயதுக்குமேல் பாக்தாத் நகரத்துக்குத்
திரும்பினார். அங்கு அவர் மக்களுக்கு உபதேசித்தார். அவருடைய
ஆசிரியரின் மத்ராஸா கல்லூரியிலேயே அவருடைய போதனைகள் நடந்தன.

அப்போது உலக மையங்களில் பாக்தாத் நகரம் முதன்மையாக
இருந்தது. கிழக்கு நாடுகளும் மேற்கு நாடுகளும் வடதிசை தென் திசை
நாடுகளும் கூடும் முக்கிய கேந்திரமாக விளங்கியது.

அப்போதைய அரபு உலகின் தலைநகரமாகவும் இருந்தது.
இஸ்லாமின் தலைமைத்துவமும் பேரரசர் அந்தஸ்தும் பெற்ற கலீ·பா
இருக்கும் இடம்.

தமிழ்நாட்டுக்கும் ஈராக்குக்கும் மிக நெருங்கிய தொடர்புகள்
எப்போதுமே இருந்துவந்தன.
ஈராக்கின் பழைய தமிழ்ப் பெயர் 'வச்சிரநாடு'. பாக்தாத் நகரை
தமிழர்கள் 'வகுதாபுரி' என்றழைத்தனர். அதனுடைய சாயலாக தமிழகத்துக்கு
வரப்போக இருந்து, அங்கேயே குடியேறிய அராபியத் தமிழர்கள்
கீழைக்கரையை 'வகுதாபுரி' என்றும் அது இருந்த பிரதேசத்தை
'வச்சிர நாடு' என்றும் அழைத்தனர். பாண்டியர்களின் கல்வெட்டுக்களில்
அது 'பௌத்திரமாணிக்க பட்டினம்' என்று குறிப்பிடப்பட்டிருக்கும்.

ஹிஜ்ரி 3-ஆம் ஆண்டிலேயே கீழைக்கரையில் மசூதி கட்டி
யிருக்கிறார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அவ்வளவு நெருக்கமான
தொடர்பு இருந்தது.
ஆயுளின் கடைசிவரைக்கும் அவர் தம்முடைய போதனைகளைச்
செய்துவந்தார். சில அரிய நூல்களும் எழுதியிருக்கிறார்.
ஸ¥·பி மார்க்கத்திற்கும் நடைமுறை இஸ்லாம் மார்க்கத்துக்கும்
ஒருங்கே பேராசியராக இருப்பவர் ஷேய்க் அப்துல் காதிர் ஜிலானி.
அவர் எழுதிய நூல்களில் பிரபலமாக விளங்குவது '·புத்தூஹ் அல் காய்ப்'
எனப்படும். நாற்பது பகுதிகளாக விளங்கும் நூல்.
அவர் தோற்றுவித்த ஸ¥·பி பாதை 'காதிரியா' எனப்படும்.
ஸ¥·பி மார்க்கத்தின் முதல் தரீக்கத்-ஆக அமைந்திருப்பது காதிரியா.
இதைச் சேர்ந்த பீர்களும் பக்கிரிகளும் தமிழ்நாட்டுக்கு வந்தனர். அவ்ருடைய மகன்களில் பத்துப்பேர் இந்தியாவுக்கு வந்து மார்க்கத்தைப் பரப்பினர். அவர்களில் சிலர் தமிழகத்தில் இருந்தார்கள்.
இந்தியாவில் அவர்கள் காதிரியா இயக்கத்தை ஏற்படுத்திப் பரப்பினர்.
ஆயிரக்கணக்கானவர் அதனால் பயன்பெற்றனர். மதவேறுபாடு காட்டாமல்
இந்துக்கள் முஸ்லிம்கள் அனைவரிடமும் அன்பு காட்டி, அறவழியில்
சென்றனர்.
அவர் முதிய வயதுவரைக்கும் இருந்து பாக்தாத் நகரத்தில் சமாதி அடைந்தார்.
அவர்பேரில் அன்பும் பெருமதிப்பும் வைத்திருந்த தமிழர்கள்
அவரைப் பழனி மலையிலும் இருப்பதாக பாவித்து அங்கு இந்துக்கள்,
முஸ்லிம்கள் இரு சாராரும் கொண்டாடும் நிலையில் இருக்கிறார்.

முஹைய்தீன் ஆண்டவர் என்று தமிழர்கள் அவரை அழைப்பார்கள்.

அவர் பெயரால் முஹைய்தீன் ஆண்டவர் பிள்ளைத்தமிழ், திருப்புகழ்
போன்ற பல நூல்கள் இயற்றப்பட்டுள்ளன.
ஆன்மீகத்திலும் கஷ்டத்திலும் தம்மை நினைத்தால் வெள்ளைக்
குதிரையில் ஏறி கடும்வேகத்தில் தாம் வந்துவிடுவதாகச் சொல்லியிருக்கிறார்.

Monday, May 13, 2013

CULT AND OCCULT

NOTES ON THE BOOK 'CULT AND OCCULT'

THE BOOKS CONTENTS


THE INTRODUCTION TO THE BOOK 







Monday, May 6, 2013

'EKAKSHARA VERSE'


அருணகிரிநாதர் பாடிய 

கந்தர் அந்தாதி 

ஏகாட்சர தகர வர்க்கப் பாடல்






$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$